சசி விவசாயம்தான்
உயிர் என வாழ்ந்துவரும் பொன்வண்ணன்,
தனது மகன்
மா.கா.பா.ஆனந்தையும் தன்னைப்போலவே விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்காக அவரை விவசாய
கல்லூரியில் சேர்க்கிறார். ஆனால்,
இதில் விருப்பம் இல்லாத
மா.கா.பா.ஆனந்த் படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன்
ஊர் சுற்றுகிறார்.
விவாசயத்தில்
ஈடுபடச் சொல்லும் தனது அப்பாவிடம்,
ஒண்ணே கால் வருடத்தில்
தொழில் செய்து பெரிய தொழிலதிபராக ஆவதாகவும் கூறுகிறார். இதற்கிடையில், விவசாய கல்லூரியில் இருந்து புராஜெக்ட் செய்வதற்காக பொன்வண்ணன் வசம்
வருகிறார்கள். அதில் ஒருவர்தான் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.
அவரைப்
பார்த்ததும் மா.கா.பா.ஆனந்துக்குள் காதல் பிறக்க, நண்பர்களுடன்
சுற்றிக்கொண்டே ஐஸ்வர்யாவையும் காதலித்து வருகிறார். இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஜான் விஜய் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க
நினைக்க, அதை பொன்வண்ணன் தடுக்க நினைக்கிறார்.
ஆனால், மா.கா.பா.ஆனந்தை தனது கைக்குள் வளைத்துப் போட்டுக் கொண்டு, பொன்வண்ணனுக்கு எதிராக காய் நகர்த்துகிறார் ஜான் விஜய். இதில் யார் வெற்றி
பெற்றார்? என்பதே மீதிக்கதை.
மா.கா.பா.ஆனந்த்
பொறுப்பற்ற இளைஞன், அப்பாவுடன் மோதல், ஐஸ்வர்யாவுடன் காதல், யோகி பாபுவுடன் காமெடி என படம் முழுக்க ஜாலியாக
வலம் வந்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக
செய்திருக்கிறார். முந்தைய படங்களைவிட இந்த படத்தில் அவருடைய நடிப்பு கொஞ்சம்
மெருகேறியிருக்கிறது.
ஐஸ்வர்யா
ராஜேஷுக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு சரியாக வாய்ப்பு வழங்கவில்லை. அவருடைய
கதாபாத்திரம் வெறுமனே வந்து செல்வது பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
காமெடியன் யோகி பாபு படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லுமளவுக்கு படம் முழுக்க
வந்து ரகளை செய்திருக்கிறார். இவர் ஒவ்வொருத்தரையும் கலாய்க்கும் காட்சிகள்
எல்லாம் வயிற்றை புண்ணாக்குகின்றன.
பொன்வண்ணன்
பொறுப்பான அப்பாவாக தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து மனதில் இடம்பிடிக்கிறார்.
ஜான் விஜய் வழக்கம்போல் தனது பாணியிலேயே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
ஒரு பொழுதுபோக்கு
படமாக மட்டுமில்லாமல் விவசாயிகளின் முக்கிய பிரச்சினையை படமாக கொடுத்ததற்கு
இயக்குனர் சகாய சுரேஷுக்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம். படத்தில் பேசப்படும்
பிரச்சினைகள் அனைத்தும் நியாயம் என்றே சொல்ல வைக்கிறது. ஆனால், அதைத் தாண்டி அனைவரும் ரசிக்கும்படியான சுவாரஸ்யம் இருக்கிறதா என்றால், அதில்தான் கவனம் செலுத்தாமல் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார் இயக்குனர்.
விவசாயத்தின் மேன்மையை பற்றி எத்தனையோ படங்களில் சொல்லியிருப்பதால், சற்று வித்தியாசமாக கதைக்களத்தை அமைத்திருந்தால் படத்திற்கு கூடுதல் பலம்
சேர்த்திருக்கும்.
சாமின் இசையில்
பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம்
செலுத்தியிருக்கலாம். ராகவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கவரும் வகையில்
இருக்கின்றன.

Post a Comment