தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்அமைக்கப்படும் என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். 
சட்டசபையில் இன்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான 10 இடங்களில் அம்மா பெட்ரோல் விற்பனை நிலையங்கள் நிறுவப்படும். முதற்கட்டமாக சென்னை, சேலம், திருச்சி, திருவாரூர், தஞ்சை, வேலூர், நாகை, திருப்பூர், மதுரை, கரூர் மாவட்டங்களில் அம்மா பெட்ரோல் பங்க் அமைக்கப்படும்.


Post a Comment

 
Top