திரிஷா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது மோகினி’, ‘கர்ஜனைஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘கர்ஜனைபடத்தில் திரிஷா ஆக்ஷனுக்கு முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதனால், ‘கோலி சோடா’, ‘பத்து எண்ணுதுக்குள்ளஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த சுப்ரீம் சுந்தர், திரிஷாவுக்கு சண்டை பயிற்சி கொடுத்து வருகிறாராம். இப்படம் வட இந்தியாவில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த படத்தை சுந்தர் பாலு என்பவர் இயக்கி வருகிறார். அமித் பார்கவ் என்பவர் இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான கொடிபடத்தில் வில்லத்தனத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top