நீண்ட
இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா தமிழில் நடித்து வெளிவந்த ‘தேவி’ படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இதையடுத்து, பிரபுதேவா தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வரிசையில் தற்போது
புதுமுக இயக்குனர் அர்ஜுன் சொன்ன நகைச்சுவையான கதை பிடித்துப்போக அவரது படத்தில்
நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அர்ஜுன் கடந்த
2014-ஆம் ஆண்டு வெளிவந்த ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் உதவி
இயக்குனராக பணியாற்றியவர். தற்போது இவர் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்தின்
கதாநாயகியாக கேத்ரீன் தெரசா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்திற்கு ‘யங் மங் சங்’ என்று
வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment