இசைப் பிரியரான
நாயகன் திகாந்த் மாஞ்சலே சொந்தமாக இசைக்குழு வைத்து நடத்தி வருகிறார். இந்தக்
குழுவில் சேர்வதற்காக நாயகி ரம்யா பல முயற்சிகள் எடுக்கிறார். ஆனால், திகாந்த் அவரை ஒவ்வொருமுறையும் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி விடுகிறார்.
ஒருவழியாக திகாந்தின் பெற்றோர் மனதில் இடம்பிடிக்கும் ரம்யா, அடுத்தபடியாக திகாந்தின் மனதிலும் இடம்பிடித்து அவரது இசைக்குழுவில்
சேர்கிறார்.
இந்நிலையில், உலக அளவில் நடக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றில் வெற்றிபெறுபவர்களுக்கு பழங்காலத்து
கலசம் ஒன்று பரிசாக அறிவிக்கப்படுகிறது. நவசக்திகளால் வழிபாடு செய்யப்பட்டு
பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த கலசம் யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் மிகுந்த செல்வாக்குடனும், பலத்துடன் இருப்பார்கள்
என்பது ஐதீகம்.
அந்த கலசத்தை
பற்றி தெரிந்துகொண்ட பெரிய செல்வந்தரான தர்ஷன், அதை எப்படியாவது
அடையவேண்டும் என்று எண்ணுகிறார். இதற்கு, அந்த ஊரை சேர்ந்த
முக்கியமானவர்களை தன்னுடைய கைக்குள் வைத்துக் கொள்கிறார். மேலும், சொந்தமாக இசைக்குழு ஒன்றை தொடங்கி, போட்டியில்
வென்று கலசத்தை கைப்பற்றத் துடிக்கிறார்.
ஆனால், ரம்யாவோ அந்த கலசத்தை கைப்பற்ற நினைப்பவர்கள் ஒவ்வொருவரையும், நாகமாக மாறி கொலை செய்கிறார். இறுதியில் அந்த கலசத்துக்கும் ரம்யாவுக்கும்
என்ன சம்பந்தம்? அவள் ஏன் அந்த கலசத்தை கைப்பற்ற நினைக்கிறாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் கதை
முழுக்க ரம்யாவை மையப்படுத்தியே நகர்கிறது. அதை உணர்ந்து ரம்யாவும் அனைத்து
காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். மாடர்ன் உடையிலும், பாரம்பரிய உடையிலும் இவரது தோற்றமே ரசிக்கும்படி இருக்கிறது. ஆக்ரோஷமான
வசனங்கள் பேசும் இடங்களில் இவரது நடிப்பு பலே சொல்ல வைக்கிறது.
நாயகன் திகாந்த்
மாஞ்சலே தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பாடல்
காட்சிகளில் சிறப்பாக நடனம் ஆடி அசத்தியிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளிலும் சபாஷ்
பெறுகிறார். தர்ஷன் மாடர்ன் வில்லனாக மிரட்டுகிறார். சாய்குமார் தனக்கே உரித்தான
கம்பீரமான நடிப்பில் மிளிர்கிறார்.
நட்சத்திரங்களுக்க்கு
மேலாக படத்தில் பேசப்பட வைப்பது கிராபிக்ஸ் காட்சிகள்தான். இறுதிக்காட்சியில், மறைந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தனை கிராபிக்ஸ் மற்றும் மார்பிங்
முறையில் வரவழைத்திருப்பது பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம். மேலும், கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் நாகம், பிரம்மாண்ட
நடராஜர் சிலை மற்றும் போர் காட்சிகள் எல்லாம் படத்திற்கு பிரம்மாண்டத்தை
கூட்டியிருக்கிறது.
இயக்குனர் கோடி
ராமகிருஷ்ணா மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு இந்த படத்தை
படமாக்கியிருக்கிறார். வழக்கம்போல,
பழி வாங்கும் கதைதான்
என்றாலும் அதை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். காட்சிகளுக்கு காட்சி
விறுவிறுப்பாக செல்கிறது திரைக்கதை.
குருகிரண்
ஷெட்டியின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையிலும்
மிரட்டியிருக்கிறார். வேணுகோபாலின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிதளவில்
கைகொடுத்திருக்கிறது.

Post a Comment