ஜன 20,
                             ஜல்லிக்கட்டு நடத்தபடவேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள்  நடைபெற்று வருகின்றன.அந்த வகையில் பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் இன்று காலை பேருந்து நிறுத்தம் அருகே  போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் பீட்டாவை தடை செய்யவேண்டும்.
உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்தபடவேண்டும் என்ற கோசங்கள் எழுப்பப்பட்டது.










இந்த போராட்டம் தொப்பம்பட்டி மற்றும் கீரனூர் முகநூல் நண்பர்கள் இணைந்து நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்த்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இறுதியில்போராட்டமானது பேருந்து நிறுத்தம் முதல் யூனியன்
ஆபிஸ் வரை நடந்தது.

Post a Comment

 
Top